அரிட்டாபட்டி குளமும் அங்கு உலவும் லகடு வல்லூறும்!

 


வரலாற்றில் மதுரைக்குப் பல பெயர்கள். அவற்றில் ஒன்று எண்பெருங்குன்றம். அதற்கு எட்டு பெரும் குன்றுகள் சூழ்ந்த ஊர் என்று பொருள். அதில் ஒரு குன்று அரிட்டாபட்டி. இதை திருப்பிணையன் மலை, கழிஞ்சமலை என்றும் சொல்கிறார்கள்.

மதுரையிலிருந்து 17 கி.மீ தொலைவில் யானைமலைக்கு வடக்கே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது அழகிய அரிட்டாபட்டி மலைக்குன்று. இதை ஒட்டி அமைந்துள்ளது அரிட்டாபட்டி கிராமம்.