கல்செக்கு

பாரம்பர்ய முறையில் கல்செக்கு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் எள், கடலை, தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் நுகர்வு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கல்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி பயிர் செய்யப்படும் விவசாய உணவுப்பொருள்களில் நச்சுத்தன்மை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் பலரும் கூறிவருகிறார்கள். அதேபோல்,எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் உள்ளிட்ட பயிர்சாகுபடியிலும் அதிக அளவு ரசாயனம் இடுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் வகையில் உடல்நலன் குன்றச்செய்யும் ரசாயனத்தின் கூறுகள் உள்ளது என்று உறுதியாக பலரும் நம்புவதால், இயற்கை விவசாயத்தில் விளைந்த எண்ணெய் வித்துக்களை பயன்படுத்தி, கல் மற்றும் மரச்செக்கு மூலம் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது. கிராமப்புறங்களில் இயங்கிவரும்  செக்கு ஆலைகளைத் தேடிப்போய் சுத்தமான எண்ணெய் வாங்கும் நகரவாசிகள் பலர் உண்டு.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கல்செக்கு ஆலை அமைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி செய்துவரும் தங்கவேல் என்பரை சந்தித்து பேசினோம். “அந்தக் காலத்தில மாடுபூட்டிய செக்கு வெச்சு எண்ணெய் உற்பத்தி செஞ்சாங்க. விவசாயிகளே அவங்க நிலத்துல சாணம், குப்பை, பசுந்தாள் உரம் போட்டு இயற்கை விவசாயத்துல வௌஞ்ச நிலக்கடலை, எள், தேங்காய் கொப்பரை போன்ற எண்ணெய் வித்துக்களை மாட்டுவண்டியில ஏத்தி எங்ககிட்ட கொண்டுவந்து போட்டு அரைச்சு அதுல கிடைக்கிற எண்ணெய்யை வீட்டுக்கும் பிண்ணாக்கை மாட்டுக்கும் பயன்படுத்துவாங்க. அதனால, உழைக்கிற மாடுகளும் நோயில்லாமல் ஆரோக்கியமா இருந்திச்சு, கலப்பிடமில்லாத சமையல் எண்ணெய் குடும்ப ஆரோக்கியம் காத்திச்சு.

பசுமைப்புரட்சி நம்ம நாட்டு விவசாயிகளை ரசாயன விவசாயம் பக்கம் மடை திருப்பி விட்டுச்சு. மானாவாரியில வெளைஞ்ச நாட்டு ரக விதைகளை அழிச்சு, அதிக விளைச்சல் கொடுக்கற வீரிய விதைகளை விளம்பரம் செஞ்சதுல மண்ணின் ஆரோக்கியமும் மக்கள் ஆரோக்கியமும் கெட்டுப்போச்சு. நம்மாழ்வார் போன்ற இயற்கை ஆர்வலர்கள் பலர் ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை மக்களுக்கு ஒரு பிரசாரமாகவே எடுத்துச் சென்று பல வருஷம் போராடினாங்க. அது வீண்போகல. இப்ப ஆடுமேய்க்கிறவன் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரைக்கும் ஆர்கானிக் உணவு குறித்து பேசத் தொடங்கிட்டாங்க. பள்ளி, கல்லூரிகள்ல இயற்கை விவசாயக் கருத்தரங்குகள் நடக்குது, பத்திரிகைகளும் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.
இப்ப நஞ்சில்லா உணவு தேடி போகத்தொடங்கிட்டாங்க. பெருநகரங்கள், சிறுநகரங்கள் எல்லா இடத்திலும் ஆர்க்கானிக் ஷாப் எனப்படும் இயற்கை அங்காடிகள் திறந்தாச்சு. எங்களைப்போல செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யறவங்களைத் தேடி கார்ல வர கூட்டம் அதிகமா இருக்கு. ஆரம்பத்துல, நாள் ஒண்ணுக்கு 10 லிட்டர்கூட விற்பனையாகாத எங்க ஆலையில இப்ப 200 லிட்டர் செக்கு எண்ணெய் விற்பனையாகுது. செக்கு எண்ணெய்க்குத் தேவை அதிகம் இருப்பதால இன்னும் சில ஆண்டுகள்ல ஊருக்கு ஒரு செக்கு ஆலையும் வீதிக்கு ஓர் இயற்கை அங்காடியும் மக்கள் ஆதரவுடன் வெற்றி நடைபோடும் இது நிஜம்” என்றார் உறுதியுடன்.
Thanks...
https://www.vikatan.com/news/tamilnadu/109372-organic-oil-is-good-for-health.html

கல் செக்கு எண்ணெய்தான் உடலுக்கு ஆரோக்கியம்

பாரம்பர்ய முறையில் கல்செக்கு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் எள், கடலை, தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் நுகர்வு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கல்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி பயிர் செய்யப்படும் விவசாய உணவுப்பொருள்களில் நச்சுத்தன்மை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் பலரும் கூறிவருகிறார்கள். அதேபோல்,எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் உள்ளிட்ட பயிர்சாகுபடியிலும் அதிக அளவு ரசாயனம் இடுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் வகையில் உடல்நலன் குன்றச்செய்யும் ரசாயனத்தின் கூறுகள் உள்ளது என்று உறுதியாக பலரும் நம்புவதால், இயற்கை விவசாயத்தில் விளைந்த எண்ணெய் வித்துக்களை பயன்படுத்தி, கல் மற்றும் மரச்செக்கு மூலம் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது. கிராமப்புறங்களில் இயங்கிவரும்  செக்கு ஆலைகளைத் தேடிப்போய் சுத்தமான எண்ணெய் வாங்கும் நகரவாசிகள் பலர் உண்டு.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கல்செக்கு ஆலை அமைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி செய்துவரும் தங்கவேல் என்பரை சந்தித்து பேசினோம். “அந்தக் காலத்தில மாடுபூட்டிய செக்கு வெச்சு எண்ணெய் உற்பத்தி செஞ்சாங்க. விவசாயிகளே அவங்க நிலத்துல சாணம், குப்பை, பசுந்தாள் உரம் போட்டு இயற்கை விவசாயத்துல வௌஞ்ச நிலக்கடலை, எள், தேங்காய் கொப்பரை போன்ற எண்ணெய் வித்துக்களை மாட்டுவண்டியில ஏத்தி எங்ககிட்ட கொண்டுவந்து போட்டு அரைச்சு அதுல கிடைக்கிற எண்ணெய்யை வீட்டுக்கும் பிண்ணாக்கை மாட்டுக்கும் பயன்படுத்துவாங்க. அதனால, உழைக்கிற மாடுகளும் நோயில்லாமல் ஆரோக்கியமா இருந்திச்சு, கலப்பிடமில்லாத சமையல் எண்ணெய் குடும்ப ஆரோக்கியம் காத்திச்சு.
பசுமைப்புரட்சி நம்ம நாட்டு விவசாயிகளை ரசாயன விவசாயம் பக்கம் மடை திருப்பி விட்டுச்சு. மானாவாரியில வெளைஞ்ச நாட்டு ரக விதைகளை அழிச்சு, அதிக விளைச்சல் கொடுக்கற வீரிய விதைகளை விளம்பரம் செஞ்சதுல மண்ணின் ஆரோக்கியமும் மக்கள் ஆரோக்கியமும் கெட்டுப்போச்சு. நம்மாழ்வார் போன்ற இயற்கை ஆர்வலர்கள் பலர் ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை மக்களுக்கு ஒரு பிரசாரமாகவே எடுத்துச் சென்று பல வருஷம் போராடினாங்க. அது வீண்போகல. இப்ப ஆடுமேய்க்கிறவன் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரைக்கும் ஆர்கானிக் உணவு குறித்து பேசத் தொடங்கிட்டாங்க. பள்ளி, கல்லூரிகள்ல இயற்கை விவசாயக் கருத்தரங்குகள் நடக்குது, பத்திரிகைகளும் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.

இப்ப நஞ்சில்லா உணவு தேடி போகத்தொடங்கிட்டாங்க. பெருநகரங்கள், சிறுநகரங்கள் எல்லா இடத்திலும் ஆர்க்கானிக் ஷாப் எனப்படும் இயற்கை அங்காடிகள் திறந்தாச்சு. எங்களைப்போல செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யறவங்களைத் தேடி கார்ல வர கூட்டம் அதிகமா இருக்கு. ஆரம்பத்துல, நாள் ஒண்ணுக்கு 10 லிட்டர்கூட விற்பனையாகாத எங்க ஆலையில இப்ப 200 லிட்டர் செக்கு எண்ணெய் விற்பனையாகுது. செக்கு எண்ணெய்க்குத் தேவை அதிகம் இருப்பதால இன்னும் சில ஆண்டுகள்ல ஊருக்கு ஒரு செக்கு ஆலையும் வீதிக்கு ஓர் இயற்கை அங்காடியும் மக்கள் ஆதரவுடன் வெற்றி நடைபோடும் இது நிஜம்” என்றார் உறுதியுடன்.
Thanks...

https://www.vikatan.com/news/tamilnadu/109372-organic-oil-is-good-for-health.html

கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வரவேண்டும்

கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும்.

அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான்  நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது  உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மைக் கொண்டது.  

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும்  ஆற்றல் கொண்டவை.  

பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு  சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.  

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது  உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக  சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.  

வெண்டைக்காய் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும்  குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன்  கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.  

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை  பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.  

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை  கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.  

http://npapp.in/QELYRY/a2ga via @NP_App: http://npt.indiatimes.com

'கலைஞரின் சட்டப்பேரவை வைரவிழா ஓர் அரசு விழாவாக பரிமளித்திருக்கவேண்டும்'

சட்டப்பேரவைப் பணிகளில் கலைஞரின் வைரவிழாவை நிச்சயம் தமிழக அரசுதான் நடத்தியிருக்க வேண்டும். ஏனோ காலமும் சூழலும் அதற்கு இடம் கொடுக்காமல் போய்விட்டது.
அப்படி நடத்தாமல் போனது துரதிஷ்டவசமானது. இதற்கு ஆளும் ஈபிஎஸ் அணி அதிமுக காரணமா? அல்லது ஓபிஎஸ் அதிமுக காரணமா?

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.

மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.

நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.

தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

-நன்றி
மதுரை ஆண்மீக குழு.

கீரைகளின் மருத்துவ பயன்களை அறிவோம்...

வெந்தயக்கீரை: வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு  சத்துக்கொண்டது. இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

முருங்கைக் கீரை
 
இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை  அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து  வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.

எடை குறைய எளிய வழிகள்

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தண்ணீர் வைத்தியம்:
தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.

சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?


இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாதவெடிப்பை குணப்படுத்தும் அருமையான மருந்து!


ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது.
பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம். பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: இஞ்சி, சீரகம், தனியா, பனங்கற்கண்டு……செய்முறை: இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்தத்தை சீர்செய்யும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது.  தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.
குப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: குப்பைமேனி, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும்.
இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும்.
பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களைஅழிக்கும்.