தினமும் காலையில் சிறிது தூரம் நடக்கும் இந்த நடைமுறையை பின்பற்றினால் உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் பல நன்மைகளை பெறலாம்

 

பல உடல்நல பிரச்சனைக்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுவது தினசரி நடைபயிற்சி செய்யுங்கள் என்பதுதான். காலையில் எழுந்ததும் நடைபயிற்சி செய்யும் பழக்கம் பலரிடமும் உள்ளது. ஆனால் ஏராளமானோர் சிந்திப்பது 40 அல்லது 50 வயதுக்கு மேல் தான் வாக்கிங் செல்ல வேண்டும் இப்போது எதற்கு என சிந்திக்கிறார்கள். வாக்கிங் என்பது அனைத்து வயதிலும் செய்யவேண்டிய ஒன்றாகும். இதனால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்

தினமும் காலையில் சிறிது தூரம் நடக்கும் இந்த நடைமுறையை பின்பற்றினால் உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் பல நன்மைகளை பெறலாம். பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளில் இருந்தும் வாக்கிங் பயிற்சி உங்களை பாதுகாக்கிறது. அதிகாலை நடைப்பயிற்சி ஏன் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்


நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் முக்கிய அங்கமாகும். இது நாள் முழுவதும் உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. நடைபயிற்சியின் போது உடல் நிலையான இயக்கத்தில் இருப்பதால், செல்கள் இயல்பை விட அதிக ஆற்றலை உருவாக்குகின்றன. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வீட்டிற்குள்ளும் வெளியேயும் ஒரு 10 நிமிட நடை போதும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். இது நடைபாதையாக கருதப்படவில்லை


பூங்காவில் அல்லது தெருவில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது ஒரு நல்ல நடை. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 10 நிமிடம் படிக்கட்டுகளில் நடப்பது ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வேலை செய்வதும், ஒவ்வொரு நாளும் ஒரே வழக்கத்தை கடைப்பிடிப்பதும் வெறுப்பாக இருக்கலாம். காலை நடைப்பயிற்சி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பலப்படுத்தும். உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. ஏனெனில் நடைப்பயிற்சி உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தூண்டுகிறது. அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. மன அழுத்தத்தைக் குறைத்தல், மனச்சோர்வைக் குறைத்தல், நேர்மறை சிந்தனையை உருவாக்குதல், மனநலப் பிரச்சனைகளைக் குறைத்தல் போன்ற பலன்களை நடைப்பயிற்சி வழங்குகிறது

காலையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. வாரத்தில் 7 நாட்களில் குறைந்தது 5 நாட்களாவது காலையில் நடக்க முயற்சி செய்யுங்கள். அதிகாலை நடைபயிற்சி கலோரிகளை எரிக்கிறது. அதுமட்டுமின்றி, உடல் எடையை குறைக்கலாம். காலையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் சுமார் 400 கலோரிகள் எரிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது நடையின் வேகத்தைப் பொறுத்தது. இது ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடும்

அதிகாலை நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. வயிறு காலியாக இருப்பதால், அந்த நேரத்தில் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து ஆற்றலை உற்பத்தி செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலை நடைபயிற்சி சிறந்தது. இது பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இது சுவாச திறனை மேம்படுத்துகிறது

இதுகுறித்த ஒரு ஆய்வின்படி, தினமும் 30 நிமிடம் நடக்க ஆரம்பித்தால், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கலாம். நடைப்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். நீண்ட காலை நடைப்பயிற்சி மேற்கொள்வது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்திலிருந்தும் பாதுகாக்கலாம்

நடைப்பயிற்சியானது உடலில் உள்ள அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய தூண்டும் ஆற்றல் கொண்டது. இது தசை ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. கால் தசைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க விறுவிறுப்பான நடைப்பயிற்சி, படிகள் ஏறுதல், சாய்வாக நடப்பது போன்ற பயிற்சிகளை செய்யலாம்

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு இரவில் தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மாலைப் பயிற்சிகளை விட காலைப் பயிற்சிகள் சிறந்தது. மாலையில் உடற்பயிற்சி செய்வது சோர்வு மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும்

மூல நோய்க்கு கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!

 1.பசையம் நிறைந்த உணவுகள்: பசையம் அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸை ஏற்படுத்தும். ஏனென்றால், சில உணவுகளில் உள்ள பசையம் (புரதம்) குடல் சுவர்களில் ஒட்டிக்கொண்டு செரிமான செயல்முறையைத் தொந்தரவு செய்யும்.




கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் பசையம் எனப்படும் புரதம் காணப்படுகிறது. பசையம் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுக்கும் மற்றும் செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டு, அது பின்நாளில் பைல்ஸ் நோயாக உருவெடுக்க வழிவகுக்கிறது.

2. பசும்பால் அல்லது பால் பொருட்கள்: சிலருக்கு, பசும்பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் நோயை உருவாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரதமும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடியது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பசும்பாலுக்கு பதிலாக சோயா பால் பயன்படுத்தலாம்.

3. சிவப்பு இறைச்சி: சிவப்பு இறைச்சியை உட்கொள்வது மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோய்க்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் சிவப்பு இறைச்சியில் மிக குறைவான நார்ச்சத்துக்கள் உள்ளன மற்றும் கொழுப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதனை உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாமல் போகிறது. இதனால் உருவாகும் கழிவையும் வெளியேற்றுவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. எனவே மூலநோயில் இருந்து தப்பிக்க சிவப்பு இறைச்சியை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

4.பொரித்த மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகள்: பொரித்த அல்லது ஃபாஸ்ட் புட் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை வரலாம். ஏனெனில், சிவப்பு இறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளது. அதற்கு பதிலாக, நீங்கள் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வது சரிவிகித உணவுக்கான சரியான தேர்வாக அமையும்.

5. ஆல்கஹால்: மதுவில் உள்ள ஆல்கஹால் உடலில் நீரிழப்பை ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் வறட்சி, மலச்சிக்கல் பிரச்சனையை தீவிரமாக்குகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையானது மலம் எளிதில் வெளியேறுவதை தடுப்பதோடு பைல்ஸ் நோயையும் உண்டாக்குகிறது.

இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


🌾 சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைபிடிப்பார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.

🌾 பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

🌾 இவ்விழா நாளில் பகைமை, பசி நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாளில் பகைமை, பசி நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.

தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. முதல்நாள் போகி பண்டிகை. இந்நாள் இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

2. இரண்டாம் நாள் சூரியன் பொங்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

3. மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். உழவுத் தொழிலுக்கு துணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளாகும்.

4. நான்காம் நாள் காணும் பொங்கல்.

🌾 அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள். சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும்.

🌾 குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும்.

🌾 பொங்கல் பண்டிகையின் முக்கிய பங்காக இருக்கும் கரும்பானது உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது மிகையாகாது.