நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு

நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம்.

இரவு பகலாக வேலைபார்ப்பவர்களா நீங்கள்? இதைப் படியுங்கள் முதலில்!

இரவு பகலாக வேலைபார்ப்பவர்களா நீங்கள்? இதைப் படியுங்கள் முதலில்!

By DN, ஹூஸ்டன்

இரவு மற்றும் பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு மாரடைப்பு, உடல் பருமன், தீவிர பக்கவாதம் போன்ற நோய் அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால் சென்டர்களிலும், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியம் இளைய தலைமுறையினர் மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புபவர்கள் அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ இல்லம் திரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது. சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் ஆய்வில் கூறியுள்ளதாவது:

இரவு மற்றும் பகல் என 24 மணி நேர சுழற்சியில் நமது உடல் உறுப்புகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் "உயிரியல் கடிகாரம்' நம் உடலில் செயல்பட்டுவருகிறது.

இரவு மற்றும் பகலில் நமது உடல் செய்ய வேண்டிய பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அவை மேற்கொண்டு வருகிறது.

எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல்பாடுகளுக்கு இந்த "கடிகாரம்' மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இரவு பகல் என மாறி மாறி பணிபுரிபவர்கள் தூங்காமல் முழித்து இருப்பதற்காக டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூங்கியெழும் நேரம் ஒழுங்கில்லாமல் அடிக்கடி மாறுவதால் உடம்பின் இயக்கச் சுழற்சி சீராக இன்றித் தடுமாற்றம் அடைகிறது.

இதனால், 24 மணி நேர இயற்கையான சுழற்சி தடைபடுவதுடன் உடலியக்க செயல்பாடுகளும் பாதிப்படைகிறது.

அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை வரவழைக்கவும் உதவும் மெலடோனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இதனால் உடல் பாதிக்கப்படுகிறது. மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய அனைத்தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்ற வற்றுக்கு முக்கிய காரணமாகின்றன.

இதனால், மூளையின் ஒரு பகுதியின் ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு தீவிர ரத்த அடைப்புகள் உண்டாகி பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

வழக்கமான முறையில் வேலை பார்ப்பவருடன் ஒப்பிடுகையில், பகல்-இரவு என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்ப்பவரின் மூளை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உணர்விழத்தல், மூட்டுகளின் இயக்கம் தடைபடுதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

ஆண்களைக் காட்டிலும், இளவயதுப் பெண்களுக்குப் பக்கவாத பாதிப்புகள் அபாயம் குறைவாக உள்ளதாக அந்த சோதனையில் தெரியவந்துள்ளது. ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவர்களின் மூளைக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி, நரம்பு மண்டலங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பை அளிக்கிறது.

ஆனால், வயதான பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபரீதா சொராப்ஜி என்ற ஆராய்ச்சியாளரையும் உள்ளடக்கிய டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் இந்த ஆய்வு முடிவுகள் "எண்டோகிரினாலஜி' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Thanks...http://www.dinamani.com/world/2016/06/03/இரவு-பகலாக-வேலைபார்ப்பவர்க/article3464397.ece

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது…..

மரபணுத் திருத்தம் மூலம் எச்.ஐ.வி வைரஸ் மற்றும் மரபணுக்களை நிச்சயமாக நீக்கமுடியும்: - ஆய்வில் வெற்றி!!

ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது.

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!



இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

சிறுநீரக நோய்களில் இருந்து பாதுகாப்பது எப்படி

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 2 ஆயிரத்து 500 பேர் வரை நாட்பட்ட சிறுநீரக நோயினால் (Chronic Renal Failure) பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்கிறார்கள். சிறுநீரகம் (Kidney) செயலிழந்தால் அதனை சாதராண மருந்துகள் மூலம் சீர் செய்ய முடியாது. அதற்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை அல்லது குருதி சுத்திகரிப்புச் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

உடலில் செரிமானம் சீராக நடைபெறுவதில் குடல்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், செரிமானம் மீண்டலம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் உடலிலேலே குடலில் அதிக கழிவுகள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் இதன் வழியாகத் தான் உடலின் அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் உடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும்.
எனவே அத்தகைய குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும் கூரைப்பூச் செடி! ஒருமுறை செய்து பாருங்கள் - பலன் தெரியும்!!

சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார். நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்! ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும் எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது? - இந்த வீட்டு வைத்தியத்தை ஒருமுறை செய்து பாருங்கள் - பலன் தெரியும்.

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சிவப்பெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரிதான்!!!

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசியே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

சிவப்பெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரிதான். அதனால்தான் மகா சிவராத்திரியன்று நாம் சிவபெருமனை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்று கூறுகின்றனர்.

சிவ ராத்திரி விரதம் இருப்பது எப்படி:

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.

தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.

வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

பூஜையின் போது `சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும்.

மேலும் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறியும் பூஜிக்கலாம்.

இந்த பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் தூங்கிவிடக்கூடாது.

நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிகமாக அதனை உட்கொள்ளக்கூடாது என்று அந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.

அதாவது, ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ஆறு பைன்ட் அளவு பியர் அல்லது ஏழு கிளாஸ் வைன் ஆகியவற்றுக்கு மேலாக உட்கொள்வதை தவிர்க்குமாறு அந்த அறிவுறுத்தல் கூறுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

தினந்தோறும் மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்தில் சில நாட்கள், அதனை அருந்துவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது எனவும் புதிய ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மது அருந்துவதால் ஏற்படும் நோய்களுக்கு அப்பால், அதிக மது அருந்துபவர்கள் வீதி விபத்து மற்றும் காயங்களுக்குள்ளாவதும் அதிகம் நடைபெறுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஒரு யூனிட் என்றால் என்ன?

புதிய ஆய்வின் பரிந்துரையின்டி பியர் என்றால் ஒரு பைண்ட் அதாவது 576 மில்லி லிட்டர் அளவு, வைன் என்றால் 175 மில்லி லிட்டர் அளவு, விஸ்கி அல்லது ரம் போன்ற கூடுதல் ஆல்கஹால் கொண்ட மதுபானமாக இருந்தால் 50 மில்லி லிட்டர் அளவுகள் ஆகியவை சராசரியாக இரண்டு யூனிட் அளவுகளாக மதிப்பிடப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முந்தைய வழிகாட்டலின்படி, ஆணொருவர் நாளொன்று மூன்று முதல் நான்கு யூனிட் அளவும், பெண்கள் இரண்டு முதல் மூன்று யுனிட் அளவும் மதுபானம் அருந்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய பரிந்துரை வாரத்திற்கே இருபாலாரும் அதிகபட்சமாக 14 யுனிட் மட்டுமே மதுபானம் அருந்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.

பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது, மது அருந்த வேண்டிய அளவு முன்னர் மட்டுப்படித்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் முழுமையாக மது அருந்தக் கூடாது என்று புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது.

குறைந்தளவில் மது அருந்துவது மாரடைப்பை தடுக்கும் என முந்தைய சில ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்ந்தும் கருத்திற்கொள்ளப்படாது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அத்தோடு, அதிக மது அருந்துவதனால் வாய், தொண்டை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
www.bbc.com/tamil/science/2016/01/160110_alcohol_limit

மருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது!


என்னிடம் உடல்நல ஆலோசனை பெறுவதற்காக மேரி என்ற பெண் வந்திருந்தார். வயது, அறுபதுகளின் தொடக்கத்தில் இருக்கும். நீரிழிவு நோயாளி. தனது கால் தசையில் வலி ஏற்படுவதாகவும், கொழுப்பைக் குறைப்பதற்காகத் தான் எடுத்துக்கொள்ளும் ஸ்டேட்டின் மருந்து காரணமாக அப்படி இருக்கலாம் என்றும் அவர் சொன்னார். “ஆனால், அதை நிறுத்துவதற்கும் எனக்குப் பயமாக இருக்கிறது,” என்றார்.

மகாதமனியிலிருந்து ரத்தக் கட்டி ஒன்று புறப்பட்டு, அவரது மூளைக்குச் சென்று மோசமான பக்கவாதத்தை ஏற்படுத்திவிடலாம் என்று ஒரு செவிலியர் தன்னிடம் சொன்னதாக என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

தீவிர இதயநோய் கொண்டவர்கள், அதுவும் மருந்துகளை உட்கொள்வதன் பலன் கிடைக்கப்பெறவிருப்பவர்கள், மருந்து உட்கொள்வதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தினாலும்கூட 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே மரணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று அந்தப் பெண்ணிடம் நான் உறுதிபடக் கூறினேன்.

லாபம் எனும் கடமை

தவறான தகவல்களையும் அச்சத்தையும் பரப்பிவிடுவதும்தான் நம்மிடையே அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களில் மருந்து நிறுவனங்களின் வணிக நோக்கமும் ஒன்று.

“மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய பங்குதாரர்களுக்கு லாபம் கொடுத்தாக வேண்டிய தார்மிகக் கடமையையும் சட்டரீதியிலான பொறுப்பையும் அவை கொண்டிருக்கின்றன. ஆனால், சிறப்பான மருத்துவத்தை நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் அளிப்பதில், அவற்றுக்கு அதே பொறுப்பும் கடமையும் இருப்பதில்லை. எல்லாவற்றையும்விட மோசம் எதுவென்றால் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தோல்வியும் மருத்துவர்கள், நிறுவனங்கள், மருத்துவ இதழ்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ரகசியக் கூட்டும்தான்” என்று ஆதாரத்தின் அடைப்படையிலான மருத்துவத்துக்கான மையத்தின் இதய மருத்துவர் பீட்டர் வில்ம்ஷர்ஸ்ட் கடந்த ஆண்டு ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்.

மரணத்துக்குக் காரணம்

கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீட்டர் காட்ஷ் சொல்லும் தகவலோ, இன்னும் அதிர்ச்சியளிக்கிறது: இதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் அடுத்தபடியாக மரணத்துக்குக் காரணமாக இருப்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள்தான் என்பதே, அந்த முக்கியத் தகவல்! பி.எம்.ஜே. என்ற மருத்துவ இதழில் அவர் தந்திருக்கும் தரவுகளின்படி மன அழுத்தத்துக்கும் மூப்பு மறதி நோய்க்கும் கொடுக்கப்படும் மருந்துகள் உட்பட்ட மனநல மருந்துகளால் 65 வயதுக்கும் மேற்பட்ட 5 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.

2007-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் முன்னணி 10 மருந்து நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய பித்தலாட்டங்களுக்காகப் பெருமளவிலான அபராதத் தொகையைக் கட்டியிருக்கின்றன. அங்கீகரிக்கப்படாத மருந்துப் பரிந்துரைகளுக்காக மருந்துகளை விற்பது, ஆய்வு முடிவுகளைத் தவறாக முன்வைப்பது, மருந்துகளால் ஏற்படக்கூடிய தீங்குகளை மறைப்பது போன்றவை இந்த முறைகேடு களில் அடங்கும். ஆனால், இந்தக் குற்றச் செயல்கள் மூலம் தொடர்ந்து லாபம் கிடைக்கும்வரை, அவர்கள் இவற்றை நிறுத்திக்கொள்ளப் போவதே இல்லை.

பாதி ஆய்வு பொய்

மருத்துவ இதழ்களும் ஊடகங்களும் மருந்து நிறுவனங்களின் பித்தலாட்டங்களுக்குத் துணைபோவது மட்டுமல்ல, அறிவியல் தரவுகளை நியாயமான, சுதந்திரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்பவர்களின் குரல்களை அடக்குவதிலும் அவை கூட்டு சேர்கின்றன.

லான்செட் இதழின் ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்ட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சொன்ன ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவம் சார்ந்து எழுத்துகளில் பாதி பொய்யே; இருட்டுக்கு இட்டுச்செல்லும் பாதையை நோக்கி, இன்றைய அறிவியல் திரும்பியிருக்கிறது என்கிறார் அவர்.

யாருக்கும் துணிவில்லை

மருந்துகள் எந்த அளவுக்கு ஆபத்தற்றவை என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி டேம் சாலி டேவீஸ் சமீபத்தில் உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. மக்களிடையே நம்பிக்கையை மீட்டெடுக்கும் செயல்தான் இது. ஆனால், இந்த ஆய்வை நடத்துவதற்கு மருத்துவ அறிவியலுக்கான அகாடமியை அவர் கேட்டுக்கொண்டிருப்பதுதான் இதில் ஏமாற்றமளிக்கும் விஷயம்.

கோழிகளுக்குப் பாதுகாவலாகக் குள்ளநரியை நியமிக்கும் கதைதான் இது. ஏனெனில், அந்த அகாடமி சுதந்திரமாக இயங்கக்கூடியது அல்ல. எல்லா மருத்துவ வெள்ளோட்ட ஆய்வு முடிவுகளையும் அனைத்து மருத்துவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் ஓர் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு அந்த அகாடமி ஆதரவளிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான அரசியல்ரீதியிலான துணிவு சுத்தமாக யாருக்கும் இல்லை என்பதுதான் இவற்றிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.

நோயாளிகளுக்கு என்ன தேவை?

“நோயைக் கண்டறிவதில் மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவதில், அதே அளவிலான அளவுகோலைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு” என்று பேராசிரியர் கிறிஸ் ஹாம் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டிருந்த மேரி என்ற பெண்மணி யின் கதைக்கு வருவோம். தான் உட்கொண்ட ஸ்டேட்டின் மருந்துகளை நிறுத்திய ஒரு வாரத்தில் அவரது கால்தசை வலி மறைந்து, தான் ஒரு புதிய பெண்ணாக உருவெடுத்தது போல் உணர்வதாகக் கூறினார்.

அவருடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. முன்பைவிட வீரியம் குறைந்த மருந்தைக்கொண்டு தற்போது அவர் சமாளித்துவருகிறார். மருந்துகளுக்குப் பதில் அவருக்கு நான் பரிந்துரைத்த சில உணவு முறைகளைக் கடைப்பிடித்துவருவதால், இரண்டு கிலோ எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தவும் அவரால் முடிந்திருக்கிறது.

தரம் மிக்க சிகிச்சை

பெருநிறுவனங்களின் பேராசையும் அரசியல்ரீதியிலான தோல்வியும் மருத்துவப் பராமரிப்பையே இன்றைக்கு நிலைகுலையச் செய்திருக்கின்றன. தவறான மருத்துவ அறிவு கொண்ட மருத்துவர்களும், தவறான மருத்துவத் தகவல்கள் கிடைக்கப்பெற்ற நோயாளிகளும்தான் இன்று பல்கிப் பெருகியுள்ளனர்.

மிக மிக வெளிப்படையான அணுகு முறையையும் பொறுப்பேற்பையும் பின்பற்ற வேண்டிய காலம் இது. அப்படிச் செய்தால்தான் மருத்துவமனையிலேயே மிகவும் முக்கியமான நபரான நோயாளிக்குத் தரம் மிக்க சிகிச்சையை மருத்துவர்களாலும் செவிலியர்களாலும் வழங்க முடியும்.

“சமூகத்தின் கடைமட்டத்தில் இருப்போருக்கு அறிவைப் பெறுவதற் கான வழிமுறைகள் அனைத்தையும் உத்தரவாதப்படுத்துவதுதான், நாட்டில் உள்ள அனைத்துப் பணக்காரர்களின் செல்வங்களைவிடவும் முக்கியமானது” என்று அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, மருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது!

- அஸீம் மல்ஹோத்ரா, லண்டனைச் சேர்ந்த இதய மருத்துவர், � தி கார்டியன்,

சுருக்கமாகத் தமிழில்: ஆசை


m.tamil.thehindu.com/general/health/கொல்லும்-மருந்துகள்/article8058128.ece