35 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியுள்ளதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை தண்ணீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையின் முழுக் கொள்ளளவு 152 அடி. இதில், 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கிவைக்க கேரளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, அதிகளவில் மழை பெய்தாலும் வேறு வழியின்றி கடந்த 35 ஆண்டுகளாக அணையில் 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது.
