மழை காலங்களில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது?

'மழை காலங்களில் சிறந்த
உணவு எது?'னு பலருக்கு சந்தேகம்
இருக்கும். எதை சாப்பிடலாம்,
எதை சாப்பிடக்
கூடாதுனு குழப்பமா இருக்கும்.
சிலருக்கு ஒத்துக்கொள்ளும்;
சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும்.
இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ...

* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு,
உடனடியாக கொடுக்க,
நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம்
வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக்
கொண்டால் நல்லது. இந்த
நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­
ர் சேர்த்து காய்ச்சி,
பனங்கற்கண்டு சேர்த்து,
கொதிக்க வைத்து, வடிகட்டி,
வைரஸ் காய்ச்சல்
உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
உடனடியாக காய்ச்சல்
பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும்
உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக்
கொள்ளாமல்
இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர்,
வெண்ணெய், நெய்
போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்
கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம்.
உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு,
துவர்ப்பு சுவையுள்ள
உணவுகளை மழைக்காலத்தில் அதிகம்
சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம்
வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில்
மஞ்சள் தூள், மிளகுத்தூள்,
பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்,
பூசணி, புடலை, பீர்க்கன்,
வெள்ளரி போன்ற காய்கறிகளை,
மழை சீசனில் உணவில் சேர்த்துக்
கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம்
உணவுப் பதார்த்தங்களில்,
மிளகு பொடியைச் சேர்த்துச்
சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு,
கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல்
நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப்
போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும்
டப்பாவில் சிறிது சர்க்கரைத்
துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச்
சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக
ஏற்படாது. ஆனாலும்,
பழத்தை அப்படியே துண்டுகளாக
வெட்டிச் சாப்பிட
விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.
எல்லா சீசனுக்கும்
பொருத்தமானது வாழைப்பழம்.
அதற்காக வாழைப்
பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக,
மற்ற பழங்களையும்
சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும்,
விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும்.
சிலருக்கு மழைக்காலம்
வந்து விட்டாலே ஒத்துக்
கொள்ளாது. எலுமிச்சம்,
ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும்
செய்யாது. ஆனால், ஒத்துக்
கொள்ளாதவர்கள்
கண்டிப்பாக சாப்பிடாமல்
இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான
சூட்டில் இருக்கும் படி பார்த்துக்
கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம்
சாப்பிடா விட்டாலும்
பரவாயில்லை என்றே சொல்லலாம்.
ஏனென்றால், கீரைகளை நன்றாக
தண்ணீரில் கழுவி பயன்படுத்த
வேண்டும். இல்லாவிட்டால்
கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும்
வாய்ப்புகள் அதிகம்.
* மழை சீசனில்,
எல்லா காய்கறிகளையும் உணவில்
சேர்த்துக் கொள்ளலாம்.
சிலருக்கு, தண்ணீர் சத்து அதிகமுள்ள
காய்கறிகள் ஒத்துக்
கொள்ளாது. அத்தகையவர்கள்
அவர்களுக்கு ஏற்ற
காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி,
சிக்கன் என்று சாப்பிடலாம்
ஆனால், அவை பிரஷ்ஷாக
இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.
ஏனென்றால், மழைக்
காலங்களில் கடைகளுக்குப் போய்
வாங்குபவர்கள் குறைவு. அதனால்,
மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க
வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில்
பொரித்த உணவுகளையும்
அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச்
சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது,
பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல்,
அதற்கு பதிலாக உப்புமா உருண்டை,
இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என
சாப்பிடலாம். நாம் தினமும்
சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச்
சாப்பிட்டால் போதும்.

No comments: