நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறதுஎன்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? – அது ஒரு நீண்ட பயணம்! வாய் வழியாக சாப்பிடும் உணவுஉணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது.

அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்துதேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. 
தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது. 
சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில்அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல்
மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்துமலக்குடலுக்குள் தள்ளும்.
அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனேமூளைக்கு 
'மலம் வந்திருக்கிறது'என்ற தகவலை உணர்த்தும். 
ப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். 
மலத்தை வெளியேற்றுவதில் மலக்குடல்ஆசனவாய் போன்றவைகளின் பங்கு முக்கியமானது.

இவை இரண்டும் 15 செ.மீ. நீளம் கொண்டவை. நேரத்திற்கு சாப்பிட்டால்
அளவோடு சாப்பிட்டால்பழம்காய்கறிகளை கொண்ட சமச்சீரான பாரம்பரிய 
சத்துணவுகளை சாப்பிட்டால்வாழ்வியல் முறைகளை நன்றாக அமைத்துக்கொண்டால் 
மேலே சொன்ன அந்த நீ..ண்..ட.. உணவுப்பயணம் சரியாக நிகழும். 
முறையாகமுழுமையாக ஜீரணமாகி மலமும் நன்றாக வெளியேறும்.

இவை சரியாக நடக்கும் வரை நமக்கு எந்த சிக்கலும் இல்லை. 
வயிற்றில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாமல் நாம் உண்டு
நம் வேலை உண்டு என்று வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்து கொண்டிருக்கும். 
மாறாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டால்நமது ஆரோக்கியத்திலேயே சிக்கல் ஏற்பட்டுவிடும்.
உலகில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேரும்இந்தியாவில் சுமார் 45 சதவீதம் பேரும்,
சென்னையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேரும் இந்த மலச்சிக்கலோடு வாழ்ந்து,
நொந்து கொண்டிருக்கிறார்கள். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு 
இது அடிப்படை காரணமாக அமைகிறது.

பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்?
பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவைஅதுவும் காலை நேரத்தில் 
காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு. 
நாளுக்கு ஒரு முறையோஇருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக 
நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும்ரொம்ப இறுக்கமாகி 
வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். 
அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும்ஒரே நேரத்தில் வெளியேறாமல் 
மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.

மலச்சிக்கல் ஏற்பட என்ன காரணம்?
சாதாரண காரணங்களும் இருக்கின்றன. அசாதாரண காரணங்களும் இருக்கின்றன. 
பொதுவாக தினமும் முதல் லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது. 
பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது. எண்ணை அதிகம் 
கலந்த வறுத்த,பொரித்த உணவுகளை உண்பது. சிவப்பு நிற இறைச்சி வகைகளை 
அதிகமாக சாப்பிடுவது.

உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது..
இப்படிப்பட்டவை எல்லாம் சாதாரண காரணங்கள். இவை பெரும்பாலும் 
இளம் வயதினருக்கு உருவாகும் 'லைப் ஸ்டைல்'பிரச்சினைகள். 
அவைகளை தவிர்த்து மலக்குடலில் புற்றுநோயோகட்டிகளோ இருந்தாலும் 
மலச்சிக்கல் ஏற்படும். மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ
மீண்டும் மீண்டும் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ
அந்த நேரத்தில் வலி ஏற்பட்டாலோ அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை சந்திக்கவேண்டும்.

மலத்தோடு ரத்தம் கலந்து வந்தால்குடலிலே ரத்தக்கசிவு இருப்பதாக அர்த்தம். 
குடல் புண்பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகளின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். 
மலக்குடலில் இரு பகுதிகளிலும் குஷன் போன்ற மெல்லிய தசைப்பகுதி இருக்கிறது. 
மலத்தை வெளியேற்ற இதன் பங்களிப்பு மிக அவசியம். மலச்சிக்கல் ஏற்பட்டு
முக்கும்போது இந்த குஷன் பகுதி அழுத்தப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகி கீழே இறங்கிவிடும்.

இதைத் தான் நாம் உள்மூலம்வெளிமூலம் என்று இரண்டு வித பாதிப்புகளாக குறிப்பிடுகிறோம். 
இந்த மூலநோய் நான்குவிதமான நிலைகளைக்கொண்டது. 
முதல் இருகட்ட பாதிப்பு வெளியே தென்படாமல் உள்ளேயே இருக்கும். 
3, 4-ம் நிலை பாதிப்பு ஆசன வாய் வழியாக வெளியே தெரியும்.

மூல நோயின் அறிகுறி என்ன?
மலம் கழிக்கும்போது ரத்தம் கொட்டும். ஆனால் பெரும்பாலும் வலிக்காது. 
அசவுகரியமாக இருக்கும்.

ஆசன வாய் வெடிப்பு என்பது என்ன?
இறுகிய மலத்தைமுக்கி வெளியேற்றும் நிலை தொடரும்போது 
அது ஆசன வாய் பகுதியில் வெடிப்பை ஏற்படுத்துகிறது. 
இந்த பாதிப்பு கொண்டவர்கள் மலம் கழிக்கும்போது 
கத்தியால் குத்திக் கிழித்தது போன்ற வலியால் துடிப்பார்கள். 
அரைத்த கண்ணாடியை வைத்து தேய்த்ததுபோன்ற கொடுமையை அனுபவிப்பார்கள். 
ரத்தம் கொட்டும். புண்ணாகி அதிக தொந்தரவை ஏற்படுத்தும்.

'பவுத்ரம்என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?
மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் 
'ஆனல் கிளான்ட்எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக 
அமைந்துள்ளன. அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து,கட்டியாக மாறி 
ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, 'பைப்போன்று உருவாகிவிடும்.
மலம் கழிக்கும்போது அந்த 'பைப்'க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் 
உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். 
இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். 
மூல நோய்ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். 
ஆண்பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். 
பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். 
பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.

பெருங்குடல் புற்று நோய்க்கு என்ன அறிகுறி?
மூலம்ஆசனவாய் வெடிப்புபவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே 
பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் 
இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 
இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.

ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 
ஆண்களை அதிகம் தாக்குகிறது. 
இரும்பு சத்துபற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பைசிறுகுடல்
பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். 
பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால்பிள்ளைகளையும் 
அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.

இந்த வகை நோய்கள் இருந்தால்அவைகளை கண்டறியும் பரிசோதனை முறைகள் என்ன?
மலக்குடல்ஆசன வாய் பகுதிகளில் எத்தகைய நோய் இருக்கிறது
எந்த அளவுக்கு அது பாதித்திருக்கிறது என்பதை டாக்டரே விரலை பயன்படுத்தி பரிசோதிப்பார். 
பிராக்ட்டாஸ்கோபி முறையில் பெருங்குடலில் கேமிராவை நுழைத்தும் பரிசோதிக்கலாம்.
'கொலோனோஸ்கோபிமுறையில் பரிசோதனையும் செய்யலாம்.
அது வழியாக சிகிச்சையும் கொடுக்கலாம். 
இரண்டு மீட்டர் நீள கேமிரா இணைப்பு பெருங்குடலுக்குள் செல்லும். அதன் மூலம் பரிசோதனையும்
சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். 
அறிகுறிகளைக் கண்டு தொடக்க நிலையிலே சிகிச்சை பெறுவது நல்லது. 
இல்லாவிட்டால் அறுவை சிகிச்சைலேப்ராஸ்கோபி முறை சிகிச்சைகள் தேவைப்படும்.

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. 
தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பதுஉணவு முறை முரண்பாடுகள்
வாழ்க்கை முறை முரண்பாடுகள்மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் 
இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் 
இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 
வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும்
வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே 
இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.

Thanks...

No comments: