ரத்தத்தை சுத்திகரிக்கும் சிறியாநங்கை

கசப்பு மருந்து எனப்படும்
சிறியாநங்கை,
பெரியாநங்கை தாவரங்கள்
மருத்துவகுணம் நிறைந்தவை.
இவை செம்மண், கரிசல்
மண்களில் நன்றாக வளரும்.
இது ஒரு குறுஞ்செடி.
வேப்பிலை போன்று எதிர் அடுக்கில்
வெட்டு இல்லாத இலைகளைக்
கொண்டது.

இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும்
நாற்று எடுத்து நடலாம்.
ஆறு மாதம் கழித்து இலைகள்
அறுவடை செய்து நிழலில் 5
நாட்கள் உலரவிட்டு பின்
பொடி செய்து மருந்த
ாக உபயோகிப்பார்கள்.
ஆறு மாத்திற்கு மேல் வளர
விட்டால் எள்
பூ போன்று வெண்மையான
பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ.
நீள காய்கள் விடும். பின்
காய்கள் காய்ந்தவுடன்
வெடித்து விதைகள் சிதறிவிழும்.
இலை மென்று தின்றால்
கசப்பாக இருக்கும்.
செயல்திறன்மிக்க
வேதிப்பொருட்கள்
ஆன்டி ரோகிராப்பின் மற்றும்
பனிக்கொலின்
வேர்களிலும், இலைகளில் பீட்டா-
சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்'
என்ற கசப்புப் பொருளும்
உண்டு.
விஷக்கடிக்கு மருந்து
சிறியாநங்கையின் இலை மற்றும்
வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ
குணம் கொண்டவை.
வேட்டைக்கு செல்லும் வேடர்கள்
சிறியாநங்கை செடியின்
வடக்கத்திய
வேரை காப்பு கட்டி எடுத்து கடை வா
யில்வைத்து கடித்துக்
கொண்டு செல்வா
ர்கள்
அவ்வாறு செல்லும்போது வேறு
எந்த விஷப்பூச்சி கடித்தாலும்
தாக்காது.
தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிக
வும் நல்லது. ஆனால்
பத்தியத்திற்கு கத்தரிக்காய்
சாப்பிடக்கூடாது.
நீரிழிவு நோய்க்கு மருந்து
இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும்.
குழந்தைகள் மருந்து தயாரிக்க
ஏற்றது. காய்ச்சல்,
பூச்சிக்கொல்லி, மலம்
இளக்கி, படபடப்பு, வயிற்றுப்
போக்கு போன்ற வற்றிக்கும்,
மண்ணீரல் சம்பந்தமான
நோயிக்கும் நல்ல மருந்து.
நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப்
பயன்படுத்து கிறார்கள்.
கல்லீரல் நோய்களை போக்கும்
காய்ச்சல், கல்லீரல் நோய்களைப்
போக்கும். மஞ்சள்
காமாலை நோய்க்கு சிறந்த மருந்து.
ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும்.
சைனஸ் மற்றும்
சளித்தொந்தரவினால்
ஏற்பட்ட நோய்களை போக்கும்.
மலேரியாவிற்கு இது சிறந்த
மருந்தாக செயல்படுகிறது.
இது சிறந்த
ரத்தசுத்திகரிப்பானாக
பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும்
கேரளாவில் பாம்பு, தேள்
உள்ளிட்ட
விஷக்கடிகளுக்கு மருந்தாக
பயன்படுகிறது.
Thanks...
http://saappidu.blogspot.com.es/2011_10_01_archive.html?m=1

No comments: