வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடப்பார். இந்த இனியநாளை ஒட்டி ஸ்ரீரங்கம் பற்றிய வித்தியாசமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா!
* அயோத்தியிலிருந்து வந்தவர்: சீதையை மீட்க ராமபிரானுக்கு உதவினார் ராவணனின் தம்பியான விபீஷணன். இதற்குப் பரிசாக, தான் பூஜித்த ரங்கநாதர் விக்ரஹத்தை அவருக்கு பரிசாக அளித்தார். அதை இலங்கை கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தார் விபீஷணன். இலங்கை செல்லும் வழியில் காவிரியைக் கண்டான். அது சுழன்றோடிய அழகு கண்ட அவர், அதில் நீராட முடிவெடுத்தார். சுவாமியை கீழே வைத்துவிட்டு நீராடினான். பின்பு, சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. விபீஷணர் வருத்தத்துடன் இலங்கை போய்விட்டார். அந்த ரங்கநாதர் இருந்த இடத்தில், பிற்காலத்தில் தர்மவர்மா என்ற சோழ மன்னன் கோயில் எழுப்பினான்.