காயத்ரி மகிமை

"ஓம் பூர்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்''

- ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க நாம் பயன்படுத்தும் மந்திரம் இது.
<> <> <> <> <> <>

இதன் பொருள் தெரியுமா?
`எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழிநடத்துவாராக' என்பதுதான், இதன் பொருள்.

சரி, யார் இந்த காயத்ரி?

வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். நீராடியபின் ஜெபிப்பது சிறப்பு. முடியாவிட்டால் பல்தேய்த்து கால், கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்கலாம்.

இந்த மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிப்பது சிறப்பு. முடியாவிட்டால், இதன் பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி வரலாம்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் நம் மனத்தூய்மை பெருகும். மனம், வலிமை பெறும். ஞாபக சக்தி அபரிமிதமாகும்.

காயத்ரி சொல்லும்போது எந்தவொரு இஷ்ட தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம். காயத்ரி பெண் தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் நன்மை பல பெறலாம்.

No comments: