குக்கரில் சமைத்த உணவு சர்க்கரை நோய்க்கு காரணமா? சாராய் குக்கரில் சமைத்து பாருங்களேன்!

குக்கரில் சமைத்த உணவு சர்க்கரை நோய்க்கு காரணமா? சாராய் குக்கரில் சமைத்து பாருங்களேன்!




ன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட நாடாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தங்கவேலு, சந்திரபாபு கால படங்களில் எல்லாம் சர்க்கரை நோய் என்றால் அது பணக்காரர்கள் நோய் என்பது போல சித்தரித்திருப்பார்கள். ஆனால் இப்போது இந்த நோய் அரசாங்க மந்திரிகள் முதல் சாதாரண ஆண்டி வரை பரவலாக காணப்படுகிறது. இரத்தத்தில் எந்த அளவு சர்க்கரை (குளுக்கோஸ்) சேர வேண்டும் என்று நிர்ணயிப்பது கணையம் என்ற உடலின் முக்கியமான உறுப்பு தான். இந்த உறுப்பில் ஏற்படும் கோளாறு அல்லது செயல்பாட்டுக் குறைவு தான் சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்கிறார்கள்.


இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு குக்கர் போன்ற சமையல் சாதனங்களும் ஒரு காரணம் என்று செய்திகளில் அலசப்படுகின்றன. சாதாரண பாத்திரத்தில் சோற்றை வடித்து சாப்பிடும் பழக்கம் தான் சிறந்தது. சுவையும்,உணவின் சத்துக்களும் வீணாகமல் கிடைக்க திறந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது தான் சிறப்பு என்பதிலும் உண்மை இருக்கிறது என்கிறார்கள். அதாவது திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து கண்ணுக்கு புலப்படாத சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்கிறார்கள். ஒரு வகையில் இது சரிதான் என்பது இயற்பியலை சற்று நிதானித்து அவதானித்து பார்த்தால் புரியும்.


 
உதாரணமாக மிக்சியில் அரைத்த சட்னி விரைவில் கெட்டு விடுகிறது. சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. ஆனால் ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அலாதியாக இருக்கும். அதாவது மிக்சியின் ஜாரினுள் தேங்காய், பொட்டுக்கடலை, மிளகாய், வெள்ளைப்பூண்டு, உப்பு எல்லாம் போட்டு மூடியை கொண்டு மூடி விட்டு அரைக்கிறோம். அப்போது அந்த மூடியினுள் இறுக்கி வைக்கப்பட்ட காற்றுடன் இந்த தேங்காள், கடலை எல்லாம் சில நொடிகளில் அரைபட்டு திப்பிதிப்பியாக வந்து விடுகின்றன. ஆனால் அம்மிக்கல்லில் அரைக்கும் போது இரண்டு ராட்சத கற்கள் (அம்மி மற்றும் அரைக்கும் கல்) இந்த உணவுப்பொருட்களை அரைக்கின்றன. திறந்த வெளியில் அரைப்பதால் அதன் மீது போதிய காற்று, பிராணவாயு, வெளிச்சம் மற்றும் திறந்த வெளியில் பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் கண்ணுக்கு தெரியாமல் இழுக்கப்பட்டு அரைபடுகின்றன.


ஆக. நாம் எங்கிருந்து வந்தோமோ..அந்த பிரபஞ்சத்தின் சத்துக்கள் சட்னியில் கலந்து விடுகின்றன எனலாம். இந்த சட்னியின் சுவை அலாதியாக இருக்கும். மல்லிகை பூ போன்ற ஆவி பறக்கும் இட்லிக்கு, அம்மிக்கல்லில் அரைத்த சட்னியை விட்டு சாப்பிட்டால் எத்தனை இட்லி வயிற்றுக்குள் போகும் என்ற கணக்கே தெரியாது. இன்றைக்கும் சென்னை, மதுரை,கோவை,திருச்சி உள்பட சில இடங்களில் வீடுகளில் நடத்தப்படும் மெஸ்களில் இது போன்ற அம்மிக்கல் டெக்னிக் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டு, நல்ல உணவை கொடுப்பதுடன் நல்ல வருமானம் பார்க்கும் குடும்பங்கள் அதிகம் உள்ளன.


 
இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் இப்போது சாதாரணமாக பயன்படுத்தும் குக்கரில் வெப்பத்தின் அழுத்தத்தால் உணவுகள் சமைக்கப்படுகின்றன என்பது தெரிந்த விடயம். மாதம் தோறும் எரிவாயு சிலிண்டர் என்ற திரவ பெட்ரோலியம் வாயு உருளைக்கு 450 ரூபாய் வரை செலவிடுகிறோம். சில குடும்பங்களுக்கு இந்த ஒரு சிலிண்டரும் குறைவானதாகவே இருக்கிறது. இந்த வாயுவானது சுற்றுச்சூழலை வெப்பபடுத்துகிறது. இது தவிர, சமைக்கப்படும் உணவின் சுவையும் குறைவு தான். இது தவிர,குக்கர் உணவுகள் சர்க்கரை நோய் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணமா என்ற கேள்விக்குறியுடன் இருக்கிறது. இது போன்ற கேள்விகள், பாதிப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு குறைவான செலவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், நோய்கள் எதுவும் தாக்குவதற்கு காரணமாகமல் இருககும் வகையில் ஒரு சமையல் பாத்திரத்தை உருவாக்க முடியுமா? என்ற எண்ணத்தில் உருவானது தான் சராய் குக்கர்.


இந்தியாவின் தொழில் நகரமான புனே நகரை சேர்ந்த சமுச்சி என்விரோ டெக் என்ற நிறுவனம் இந்த குக்கரை உருவாக்கியுள்ளது. கிராமப்புற மக்களின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு தான் இந்த குக்கர் உருவாக்கப்பட்டது என்றாலும், இன்றைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட சுற்றுச்சூழலை கெடுக்கும் எரிபொருள்களின் விலை உயர்வதாலும், தட்டுப்பாடு இருப்பதாலும் இந்த சராய் குக்கரை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான எரிபொருளை குறைக்கலாம்.
இது பற்றிய ஒரு பார்வை

  • இந்த குக்கர் என்பது ஒரு பெரிய தூக்குவாளி போன்ற அமைப்பில் தான் உள்ளது. அதாவது மும்பை "டப்பா வாலாக்கள்' வைத்திருப்பது போன்ற அமைப்பில் இருக்கிறது. அடுப்பும், சமையல் பாத்திரமும் இணைந்த ஒரு அமைப்பாக இருக்குமாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது வெப்பம் மற்றும் நீராவி கொண்டு சமையல் செய்யும் அடிப்படை முறையில் இயங்குகிறது. அதாவது மிதமான தீயில், குறைந்த வெப்பத்தில் உணவு தயாரிக்கப்படுவதால் உணவின் சுவை அபாரமாக இருக்கிறது.
  • நமது பிரஸடிஜ் குக்கரில் உள்ளது போல் வால்வ், கேஸ்கட், விசில் எதுவும் இல்லை. இதனால் அரிசிக்கு இத்தனை விசில், பருப்புக்கு இத்தனை விசில் என்று எண்ணிக் கொண்டிருக்க தேவையில்லை. சமையலை தொடங்கி விட்டால் 30 நிமிடம், 45 நிமிடம் என்ற கணக்கில் முடித்துவிடலாம்.
  • இதற்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுகிறது. இதில் எரிக்கப்படும் நிலக்கரி 100 சதவீதம் தூய்மையாக எரிவதால் சுற்றுப்புற சூழலுக்கு நண்பனாக இருக்கிறது.
  • இந்த அமைப்பில் இருக்கும் அடுப்பை மட்டும் பயன்படுத்தி எண்ணெய் இல்லாத அப்பளம்,பப்படம், ஆக்டிவ் 2 மக்காச்சோளம் போன்றவற்றை வறுத்தெடுக்கலாம்.
  • இந்த குக்கரை சுற்றுலா செல்லும் போது கையோடு எடுத்து சென்று பயன்படுத்தலாம்.
  • சமையல் முடிந்ததும் குக்கரை திறக்காமல் இருந்தால், தயாரிக்கப்பட்ட உணவு 2 முதல் 4 மணி நேரம் வரை சூடாகவே இருக்கும்.
  • ஒரு குடும்பத்தில், அதாவது 5 நபர்களுக்கு சமையல் செய்ய 200 முதல் 250 கிராம் நிலக்கரி போதுமானது.

இந்தக்காலத்தில் உட்கார்ந்து கொண்டு நிலக்கரியை பற்ற வைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்புபவர்களுக்கு ஒரு பதில்....

  • சோம்பலுடன் உட்கார்நது கொண்டு சுவிட்சை போட்டவுடன் கெய்சரில் வெந்நீர் வரவேண்டும், அப்படியே வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து விட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடல் சிறிது காலத்தில் சோம்பலால் எதையும் செய்ய இயலாததாக ஆகிவிடும் என்பதே உண்மை. இது போன்ற அடுப்பு ஒன்றை வாங்கி சொஞ்சம் நிலக்கரியை அடுப்பில் போட்டு, சூடத்தை எடுத்து நெருப்பை பற்ற வைத்தால் சற்று நேரத்தில் நிலக்கரி வெப்பத்தால் கணன்று தீக்கணலாக மாறிவிடும்.
  • இப்படி ஒரு செயல்முறையில் நீங்கள் இறங்கும் போது குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பது ஒரு உடற்பயிற்சியாக மாறும்.
  • நெருப்பை தீக்கணலாக மாற்ற வாயால் அழுத்தம் கொடுத்து ஊதும் போது உங்கள் நுரையீரல் நன்றாக விரிவடைகிறது. இதனால் உடலுக்கு நிறைய பிராணவாயு கிடைக்கிறது.
  • புகை வருமே என்று கவலை வேண்டாம். இந்த அடுப்பு புகை கக்காத படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சராய் குக்கரின் அடிப்பாகத்தில் நிலக்கரியை போட்டு பயன்படுத்துவது போன்ற வடிவமைப்பு உள்ளது. ஆனால் இப்படி இல்லாமல் தனியாக அடுப்பு போன்ற அமைப்புடன், அதன் மேல் பாத்திரத்தை வைத்து பயன்படுத்துவது போன்ற மாடலும் இருக்கிறது.



அதாவ இந்த குக்கரில் சமைப்பதால் உணவின் சுவை அதிகரிக்கிறது.எப்படி தெரியுமா? இது இயற்கை எரிபொருளான நிலக்கரியால் சமைக்கப்படுகிறது. இரண்டாவதாக நமது வழக்கமான குக்கரில் உணவு கடுமையான வெப்பத்தால் அழுத்தப்படுவது போல் இதில் அழுத்தப்படுவதில்லை. இயற்கையான வெப்பத்தில் மெல்லிய தீக்கணலில் அழுத்தமில்லாமல் உணவுகள் வெந்து வருவதால் உணவின் சுவையும்,சத்துப் பொருட்களும் அப்படியே இருக்கின்றன.


வீடுகளுக்கு, உணவு விடுதிகளுக்கு என்று தனிதனியாக மாடல்கள் உள்ளன. இது பற்றி மேலும் விவரமறிய இங்கு போய் பாருங்களேன்!!
http://www.arti-india.org/downloads/pdfs/ARTIEnergy_May2010.pdf

Samuchi Enviro-Tech Pvt Ltd,
Flat no.6.Ekta Park Co-op Hsg.Soc.,Showroom.
Law College Road.Erandawane,Pune-411 004.
Email:samuchi.envirotech@gmail.com

ந்த வகையான அடுப்புகளை போல் அல்லாமல் இதே குக்கரின் அறிவியல் தத்துவத்தில் மதுரையை சேர்ந்த பாண்டவா எனர்ஜி சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் பெரிய உணவகங்கள், விடுதிகள், சிறிய மெஸ்கள் போன்ற இடங்களுக்கு விறகை எரிபொருளாக பயன்படுத்தும் அடுப்புகளை தயாரிக்கின்றனர். இவர்களது அடுப்புகளில் மழையில் நனைந்த விறகை வைத்தாலும் எரியும் என்பது தான் சிறப்பம்சம். ஒரு விறகு 2 மணி நேரத்திற்கு எரிகிறது. இதுவும் ஒரு அதிசயம் தான். இந்த அடுப்புகளை பயன்படுத்தி ஓட்டல்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவுகளை தரலாம் என்பது உறுதி. இந்த அடுப்புகள் பற்றி விபரமறிய....99443 84012 என்ற எண்ணில் அறியலாம்