உடல் வெப்பம் தணிக்கும் மருதாணி

பில்லி, சூனியம் போக்கும் மருதாணிப் பூக்கள்
கைகளிலும், கால்களிலும் செந்நிறத்தில்
மின்னும் மருதாணியை வெறும் அழகுக்காக
பெண்கள் கைககளில் வைக்கிறார்கள்
என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.
மருதாணி இலையை கைகளில் வைப்பதால்
பல்வேறு பயன்கள்
பெண்களுக்கு கிடைகின்றன .மருதாணியின்
முழுத்தாவரமும் மருத்துவ பயன்
உடையவையாகும் .. இலைகள், பட்டை, மலர், கனிகள்
போன்றவை பயனுள்ளவை.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
மருதாணியில் கௌமாரின்கள்,
நாப்தாகுயினோன்கள், லாசோன்,
ஃபிளேவனாய்டுகள், ஸ்டிரால்கள், டேனின்கள்,
ஆகியன உள்ளன.
தேமல் போக்கும் மருதாணி
இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக
இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய்
சுலபமாய் இருக்க உதவும். பெண்களின்
வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில்
அதிகப்படியான
இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும் .
கால் எரிச்சலைத் தடுக்க
இலைகளை அரைத்து பசையாக போடலாம்.
தொண்டை கரகரப்புக்கு கொப்பளிப்பு நீராகும்.
இலைகளின் வடிசாறு, அல்லது கசாயம்
வயிற்றுப்போக்கு மற்றும்
சீதபேதியினை கட்டுப்படுத்தும். கால்
எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும்.
மருதாணி இலையுடன் சிறிது குளியல்
சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில்
கருந்தேமல் மறையும் .
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால்
மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள்
கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில்
தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்
குணமாகும் .
உடல் வெப்பம் தணியும்
மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க
காலத்திலேயே இருந்துள்ளது .
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப்
புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.
நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும்
நல்ல மருந்து.
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர,
உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் .
மருதாணி இட்டுக் கொள்வதால்
நகங்களுக்கு எந்த நோயும் வராமல்
பாதுகாக்கலாம் . ஆனால் இந்த பயன்கள் எல்லாம்
தற்போது கடைகளில் கிடைக்கும்
மருதாணி கோன்களில் கிடைக்க
வாய்ப்பே இல்லை .
மருதாணி இலையை அரைக்கும்
போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம்
நன்கு ஏற உதவும் . விரல்களை நன்கு சுத்தம்
செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய
ஆரம்பிக்க வேண்டும் . இது நகத்தில்
சிவப்பு நன்கு ஏற
உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க
பயன்படும் .
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால்
சளி பிடித்து விடும் .
இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும்
போது கூடவே 7 அல்லது 8
நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்
கொள்ளலாம் .
வாய்ப் புண், அம்மை நோய்
ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண்
ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில்
கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம் .
அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5
நாளில் குணமாகும். கட்டிகளுக்கும்
அரைத்துப்பற்றிடலாம்.
இளநரையை அகற்றும் இன்றைய இளைய
தலைமுறையினருக்கு உள்ள ஒருசில
பிரச்னைகளில் இளநரையும் ஒன்று .
இதற்கு மருதாணியைக்
கொண்டு இயற்கை முறையில் எளிதாகத்
தீர்வு காணலாம் .
மருதாணி இலை அரைத்து அதன்
விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக்
கொள்ளவும் . அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2
ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன்
நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப்
தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த
கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில்
மூடி வைத்துவிட வேண்டும் .
பின்னர், இதனை காலையில்
எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள
வேண்டும் .
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம்
வரை காய வைத்துவிட்டு , பின்னர் சீயக்காய்
தேய்த்து குளிக்க வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால்,
தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.
தூக்கமின்மையை போக்கும்
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி,
தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும்.
பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
ஒருசிலருக்கு இம்மணம்
தலைவலியை உண்டாக்கும்.
மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம்,
மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார்.
இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய்,
பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன்
பூவையும், உலர்ந்த காயையும் தூள்
செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய்,
பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம்
நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.
அழகே ஆபத்தாகும்
இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக்
கொள்ள மருதாணி , டாட்டூஸ்
வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக
கொண்டிருக்கிறார்கள் .
இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும்
ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள
பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78
சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர் .
இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில்
கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும்
மருதாணி ஒரு வகையில் காரணமாக
இருப்பது கண்டறியப்பட்டது . மருதாணியில்
உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக
அமைகிறது . மேலும் அவர்களின் உடலில் சூரிய
ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம்
என்று தெரிகிறது .

2 comments:

கூடல் பாலா said...

பயனுள்ள பதிவு !

”தளிர் சுரேஷ்” said...

மருதாணியை பற்றிய பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ளமுடிந்தது பயனுள்ள பதிவு நன்றி!