வலிகளைப் போக்கும் வர மிளகாய்

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய்
இருப்பது மிளகாய் . நம் இந்திய சமையலில்
மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு.
இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய்,
குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது.
இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன.

குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின்
காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும்
விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும்
பயன்படுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின்,
கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில்
ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல்,
சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – ( விதைகள் )
பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்
விதைகளுடன் கனிகள்,
ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது..
தசைக்குடைச்சல் வலியை போக்கும்
தன்மை கொண்டது . கிருமி நாசினியாக
செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த
ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும்
மருத்துவத்தில் பயன்படுகிறது.
உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த
ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால்,
ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய
உறுப்புகளுக்கும் ரத்த
ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும்
வேதிப்பொருள்
இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.
தோல் நோய்களை போக்கும்
தோல்களின் மீது தடவும்
போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச்
செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது . தோல்
வியாதியான சொரியாசிஸ்,
நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி,
ஆகியவற்றையும் போக்க வல்லது.
பாக்டீரியங்களுக்கு எதிராக
செயல்புரிகிறது . உள்ளுக்குள் சாப்பிடும்
போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண
சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல
நோய்களைப் போக்கும்.
தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக
பயன்படுகிறது .
வலிகளைப் போக்கும்
சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண
வில்லைகளாகச்
செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது.
மேடைப் பேச்சாளர்கள் மற்றும்
பாடகர்களுக்கு மிகவும் உதவும். வலிகளைப்
போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.
இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன்
சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது . பெருங்காயம் மற்றும்
கற்பூரத்துடன்
சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது.
தீப்புண் மேல் தூவப்படுகிறது.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.