மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !


பொதுவாகவே, ஆஸ்பத்திரியில் உடல்நிலை சரியாக இல்லாத போது, உடல்நலம் முன்னேற்றம் அடைந்து, படுத்த படுக்கையாக இருக்கும்போது, தம்மைப் பார்த்துப்பேசி, தனக்குக் குணம் அடைய, தமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ வரமாட்டார்களா என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது இயற்கை.
அவர்கள் கூறும் நம்பிக்கையான உரையாடலால் நமக்கு நாமே உடல்நிலை முன்னேற்றமடைந்துவிட்டமாதிரி நமக்கு உற்சாகமோ சந்தோஷமோ உண்டாவது உண்மை.

படுத்த படுக்கையாக இருப்பவர்களையோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பவர்களையோ நாம் காணச் செல்லும்போது நமக்கு நாமே சில வழிமுறைகளை அனுசரிப்பது நல்லது. அதுதான் சிறந்ததும் கூட.
* முதன்முதலில் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியின் விசிட்டிங் வேளை எப்போது என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
* போவதற்கு முன்பாக, உங்களுக்கு உடல்நிலை ஓரளவு திருப்தியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நோயாளி, ஆஸ்பத்திரிச் சூழ்நிலையில் இருப்பதால், உங்கள் உடல்நிலை சிறிதளவாவது பாதிக்கப்பட்டு இருந்தால், நோயாளிக்கு அதே பிரச்சினை வரக்கூடும். அதுமட்டுமல்ல ; அதே மாதிரி குழப்பம் அருகில் உள்ள நோயாளிக்கும் வரக்கூடும்.
* நீங்கள் பார்க்க இருக்கும் நோயாளி எந்த வார்டு எந்த அறை படுக்கை நம்பர் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாங்கள் பார்க்கும்போது நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தாலோ அல்லது டாக்டர் அந்த நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தாலோ, தொந்தரவு செய்யாமல் வெளியே வந்துவிடவும். அல்லது வெளியே விசிட்டர் ரூமிற்கு வந்து அங்குள்ள புத்தகம், பத்திரிகை முதலியவற்றைப் படித்துப் பொறுமையாகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
வரவேற்று அறையில் வளவளவென்று எதுவுமே பேசாமல் இருப்பது நல்லது.
* வெறும் கையோடு போகக்கூடாது என்றால் பழங்களோ அல்லது ஏதாவது பரிசோ தவிர, படிக்கும் நாவல், புத்தகம் எடுத்துச் சென்றால் நோயாளி சந்தோஷம் அடைவார். குறிப்பாக வீட்டில் செய்த உணவுப் பொருட்கள் அல்லது ஹோட்டலில் செய்த பண்டங்கள் தவிர்க்கவும். பிஸ்கட், பிரட், நன்றாகப் பரிசோதனை செய்த பின் கிடைக்கும் சீல் வைத்த குடிதண்ணீர் சிறந்தது. மொபைல் எடுத்துப்போகக் கூடாது.
* நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் அவருக்கு அவசியம் நிம்மதி தேவை. அவரோடு குடும்பச் சண்டை அல்லது குடும்பப் பிரச்சினை முதலியவைகளை விவாதிப்பது நல்லதல்ல. கூடுமானவரை சப்தம் போடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, பக்கத்துப் படுக்கையில் வேறு நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தால் வார்த்தையில் மிகவும் கவனம் ÷வை.
* அவ்வப்போது அவரது உடல்நிலை பற்றி அவரைப் பரிசோதனை செய்யும் டாக்டர் அல்லது நர்சோடு எதுவும் விசாரிக்க வேண்டாம். குழப்பம் அதிகமாகும். நோயாளிக்கு நம்பிக்கை தேவை.
* கட்டில் அருகே உள்ள டிரிப் ஷீட்டில் படிக்க வேண்டாம். உங்களுக்கும் உடல்நிலை, ஜூரம் பற்றி ஒரளவு தெரிந்திருக்கும். அதற்காக டாக்டர் குறிப்பிட்ட நோய் அதன் முன்னேற்றம், குறைபற்றி நீங்களாகவே எதுவுமே தெரியாமல் முடிவு செய்யக் கூடாது. டாக்டருக்கு உங்களைவிட அதிகம் தெரியும்.
* நோயாளி ஏதாவது விரக்தியாகப் பேச நேரிட்டால் நம்பிக்கையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். போதும்.
* நோயாளியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது நாம் யாரை சந்தித்தாலும் நமது உறவினருக்கு அவரைப் பற்றிய நல்லதைத்தான் கூற வேண்டும்.

1 comment:

ம.தி.சுதா said...

பலருக்கு உதவும் நல்லதொரு பதிவு நன்றிகள் நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன