கோடை நோய்கள் தீர்க்கும் கவுமாரியம்மன்


தேனி மாவட்டம் வீரபாண்டி என்னும் ஊரில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.    பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோவிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கிறார்கள்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. இந்த விழாவின்போது, இங்குள்ள முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றை உடல் முழுக்க பூசிக் கொண்டு வந்து கவுமாரியம்மனை வழிபடும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவது சிறப்புமிக்கது. தேனியில் இருந்து வீரபாண்டி செல்ல பஸ் வசதி உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களில் இருந்து கம்பம், குமுளி செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும் வீரபாண்டி வழியாகவே செல்கின்றன.

1 comment:

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்