சாய்பாபாவுக்கு இன்று 85வது பிறந்த நாள்: கோலாகல ஏற்பாடுகள்

Top news
புட்டபர்த்தி: உலகில் உள்ளது ஒரே மதம்; அதுதான் அன்பு. உலகில் உள்ளது ஒரே ஜாதி; அதுதான் மனித ஜாதி. உலகில் உள்ளது ஒரே மொழி; அதுதான் இதய மொழி என்று உலகிற்கு எடுத்துக் கூறிய சத்ய சாய் பாபாவின் 85வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய இருப்பிடமான புட்டபர்த்தியில் இந்த நாளைக் கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சத்ய சாய் பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள புட்டபர்த்தி ரயில் நிலையம் பக்தர்களை வரவேற்க தயாராக உள்ளது.

இங்கு வரும் ஒவ்வொரு பக்தரையும் வரவேற்று பிரசாந்தி நிலையத்திற்கு அனுப்பி வைக்க சேவா தள தொண்டர்கள் தயாராக உள்ளனர். ரயில் நிலையத்தில் பக்தர்கள் இறங்கியதும் அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ தகவல் மையம் திறக்கப்பட்டு, சாய் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், பக்தர்களுக்கு தேவையான தகவல்கள் அளித்து வழிகாட்ட ஆயத்தமாக உள்ளனர். ரயில் நிலையம் முதல் பிரசாந்தி நிலையம் வரை அனைத்து பகுதிகளும் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

No comments: