கடவுளை அடைய மூன்று வழிகள்

அருள்மிகு கருப்புசாமி திருக்கோவில் - முத்துப்பட்டி
* மனம், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் போன்றது. அதன் ஒவ்வொரு இதழும் உலகமாயைகளுக்கு ஆசைப்பட்டு செல்ல விரும்பும். ஆனால், நீங்கள்தான் அதனை
கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நல்ல மனம்கூடவீணாகப்போய் விடும். மனதை கட்டுப்படுத்தி இருப்பவர்களை, வெளியில் ஏற்படும்எத்தகைய துன்பங்களும் பாதிக்காது.

* கடவுளை அடையவேண்டும் என விரும்புபவர்கள் அதற்காக சிரத்தையான செயல்களைசெய்ய வேண்டும் என்பதில்லை. எளிதாக மூன்று வழிகளை மட்டும் பின்பற்றினால்போதும். இதயத்தை அன்பிலும், செயல்களை நேர்மையிலும், உணர்ச்சிகளை
கருணையிலும் நனைத்துவிடுங்கள். இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே, கடவுளை
வெகு சீக்கிரத்தில் அடைந்து விடலாம்.

* இரும்புத்துண்டை நீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால், அதே இரும்பினை இலகுவாக்கி சிறிய பாத்திரமாக செய்து நீரில் விட்டால் மிதக்கும்.இதைப் போலவே மனதையும் இலகுவாக மாற்றிக்கொண்டால் உலக ஆசை என்ற மாயையில்மூழ்காமல், அதன் மீது பற்றில்லாமல் மிதந்து கொண்டிருக்கும்.

* மனதில் எப்போதும் இறைவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருங்கள். அவரது நாமத்தையே உச்சரியுங்கள். இறைசெயல் அல்லாத வேறு செயல்களில் ஆர்வம்
காட்டாதீர்கள் . இப்படிப்பட்டவர்களின் மனம், பூக்களில் இருந்து தேனை மட்டுமே எடுத்துக்கொள்ளும் தேனீக்கு சமமானதாக இருக்கும்

No comments: