பாடாய்படுத்தும் பாதவலி!


காலையில் படுக்கையை விட்டு எழுந்து தரையில் கால் வைத்ததும் பாதத்தில் வலி ஏற்படுகிறதா? பின்னர் நடக்க நடக்க வலி குறைந்து விடுகிறதா? இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணம் பிளான்டர் பியடிஸ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நோய்தான் என்று கூறுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள சவ்வுகளின் அழற்சியால் இந்த வலி ஏற்படுகிறது.

இதற்கு முதலில் உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலையை தவிர்க்கவும். பின்னர் உங்கள் பாதத்திற்கு தகுந்தவாறு காலணிகளை தேர்ந்து எடுக்கவும். அதாவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி, உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு தக்கபடி அமைப்பு உடையதாக, பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே, காலுக்கு தகுந்த பயிற்சிகளை செய்யுங்கள். முதலில் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மசாஜ் செய்தால், எழுந்து நடக்கும்போது வலி குறைவாக இருக்கும்.
அடுத்து முழங்காலுக்கு கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளை தேய்த்துவிட வேண்டும். பின்னர் உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக அழுத்தி வைத்து, கால்விரல்களை மட்டும் மேலே உயர்த்தவும். பிறகு பெரு விரலால் தரையை தொடவும். இப்படி தொடர்ந்து செய்வது பாதத்தின் வலியை குறைக்கும். வலி தொடர்ந்து இருந்தால் மருத்துவரை நாடவும்.

No comments: