ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிறப்புகள்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு என்று பல தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றில் சில...
* தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் தலம்.
* புராணப்படி இக்கோவிலானது திருப்பாற்கடலில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.
* சுயம்பு சேத்திரங்களில் ஒன்று இது.

* சயன கோலத்தில் மூலவரான பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது.
* மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம்தான்.
* ராமாவதாரம் முடிந்த பிறகு தோன்றிய பழமையான கோவில் இது.
* பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11-வது தலமான திருச்சிறுபுலியூருமே அந்த திருத்தலங்கள்.

No comments: