சிறுநீர் பரிசோதனையின் அவசியம்!



 

உடல் இயக்கம் சீராக நடைபெற காரணமாக இருக்கும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவு செரிமானமானவுடன் உருவாகும் கழிவுப்பொருட்களில் இருந்து சிறுநீரையும், கார்பன் டை ஆக்சைடையும் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான வேலையை செய்வது சிறுநீரகம்.
நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன வகையான நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
சில நேரங்களில் வலியில்லாமலும் சிவப்பு நிறத்திலும் சிறுநீர் வெளியேறும். அதற்கு காரணங்கள்:

* சிறுநீர் உருவாகும் பாதை அல்லது சிறுநீரகத்தில் நீண்டநாளாக நோய் இருப்பது.
* சிறுநீரகத்தின் சிறுநீர் உருவாகும் பாதையில் உள்ள கிரானுலோமேட்டஸ் பகுதியில் தொற்று நோய் உருவாதல்.
* சிறுநீரகத்தில் பெனின் நியோபிளாஸ்டிக் மற்றும் மாலிக்னன்ட் நியோபிளாஸ்டிக் போன்றவற்றில் புண் உண்டாதல்.
பால் போன்ற சிறுநீர் உருவாதல்:
கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலோ அல்லது நிணநீர் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ பால்போன்ற சிறுநீர் வெளியேறும்.
மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற சிறுநீர் உருவாதல்:
இதற்கு காரணம் செரிமானம் சீராக இல்லாமல் இருத்தல், காய்ச்சல் அதிகமாக இருப்பது, பைலிருபின் அதிகரித்து இருப்பது.
மேகம் போன்ற சிறுநீர் உருவாதல்:
பாஸ்பேட், கார்பனேட், யூரேட், லியுகோசைட், ஸ்பெர்மட்டோசோவா மற்றும் பிராஸ்டேட்டிக் திரவத்தில் மாற்றம் உண்டாகி இருந்தால், மேகம் போன்ற சிறுநீர் வெளியேறும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு:
நீரிழிவு நோய் காரணமாக, சிறுநீரில் அதிகளவு கலோரி சத்து வெளியேறுவதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும். உடல் மெலிந்து காணப்படுவர்.
நீலம் கலந்த பச்சை நிற சிறுநீர்:
சியுடோமானஸ் என்ற ஒருவகை பாக்டீரியா தொற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் நீலம் கலந்த பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

No comments: