பச்சரிசி சாப்பிட்டால் டயபடீஸ் வரலாம் – ஆய்வில் தகவல்


முற்றிலும் இயற்கையாக தோல் நீக்கிய கைக்குத்தல் அரிசியைத் தவிர்த்து பச்சரிசி உணவை சாப்பிடுவதால் டயபடீஸ் ஆபத்து அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சரிசி உணவு குறித்து ஹாரவேர்ட் பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை ஆய்வு நடத்தியது அதில் கூறியதாவது...
பச்சரிசி உணவை சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசியர்கள் மட்டும் அதிகளவில் பயன்படுத்திய நிலை மாறி அமெரிக்காவிலும் பச்சரிசி உணவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

பச்சரிசி தயாரிக்கும் நடைமுறையில் உமி முற்றிலும் நீக்கப்பட்டு, பாலீஷ் செய்யப்படுகிறது. ஆனால், இயற்கை முறையில் உமி நீக்கப்படும் கைக்குத்தல் அரிசியில் மேல் இழை நீடிக்கிறது. அதில் நார்ச்சத்து, மினரல்கள், விட்டமின்கள், பைட்டோ கெமிக்கல் பாதுகாக்கப்படுகிறது. இந்த அரிசி உணவால் ரத்தத்தில் அதிகரிக்கக்கூடிய சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி விடுகன்றன. எனவே, டயாபடீஸ் நோயாளிகள் அதை பயன்படுத்த முடியும்.
பாலீஷ் செய்யப்பட்ட பச்சரிசியில் சத்துக்கள் அழிவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து டயபடீஸ் ஆபத்து அதிகரிக்கும். குறிப்பாக வாரத்துக்கு 5 முறைக்கு மேல் பச்சரிசி உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது

No comments: