கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்!

இனிப்பான பானங்களை குடிப்பதால் கோபம் கட்டுப்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இனிப்பு பதார்த்தங்களை விட, இனிப்பு சுவை உடைய பழச்சாறுகள், பானங்கள் குடிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களோ அல்லது கோபத்தை வெளிக்காட்டும் சம்பவங்களோ ஏற்பட்டால், அவர்களுடைய கோபத்தை மனத்தளவில் கட்டுப்படுத்தி சாந்தப்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக குளுகோஸ் பானங்கள் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு, இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நி சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டாம் டென்சன் தெரிவித்துள்ளார்.

No comments: